"வாங்காத பொருளுக்கு வரும் SMS".. ரேஷன் அதிகாரி மேல் அடுக்கடுக்காக எழும் புகார்கள்

x

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே முழு நேர ரேஷன் கடையை சரிவர திறப்பதில்லை என புகார் எழுந்துள்ளது. துந்தரீகம்பட்டு கிராமத்தில் முழு நேர ரேஷன் கடை இயங்கி வருகிறது. அதில், விற்பனையாளராக கணேசன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். மேலும் இந்த ரேஷன் கடையில் லட்சுமி நகர், சக்தி நகர், துந்தரீகம்பட்டு உள்ளிட்ட 784 குடும்ப அட்டைகள் உள்ள நிலையில், வாரத்திற்கு 3 நாட்கள் மட்டுமே ரேஷன் கடை திறக்கப்படுவதாகவும் இதனால், பொருட்களை வாங்க முடியாமல் தாங்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்..


Next Story

மேலும் செய்திகள்