ரூ.5 கோடிக்கு போட்ட ஸ்கெட்ச் - ஓனருக்கே ஆப்பு வைத்த பணிப்பெண்

x

கந்தன்சாவடியைச் சேர்ந்த ஏ.எல்.சிதம்பரம் என்பவர், தனக்குச் சொந்தமான 5 கோடி ரூபாய் மதிப்புள்ள 9 ஆயிரத்து 600 சதுர அடி நிலத்தை, மாயமோகன் என்பவருக்கு குத்தகைக்கு விட்டிருந்தார். அந்த நிலத்தை, மாயமோகனிடம் வேலை செய்து வந்த ஹேமலதா, அவருடைய மகன் ராஜசேகர் ஆகியோர் வாங்கியதாக கூறி போலி பத்திரத்தை உருவாக்கி உள்ளனர். அந்த போலி விற்பனைப் பத்திரத்தைப் பயன்படுத்தி, அந்த நிலத்திற்குப் பட்டா பெற்று, சிதம்பரம் மீது சிவில் வழக்கையும் தொடர்ந்துள்ளனர். இதுதொடர்பாக, சிதம்பரம் அளித்த புகாரின்பேரில், சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் மோசடியில் தொடர்புடைய ஹேமலதா, ராஜசேகர் உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர். விசாரணைக்குப் பின்னர், கைதான 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்