அப்பாவுக்கு ஸ்கெட்ச்..! சரமாரியாக வெட்டிய கும்பல்... 16 வயது சிறுமி அரங்கேற்றிய அதிபயங்கரம்

x

தேனி அருகே, காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தையை கொல்ல பெற்ற மகளே, காதலனுடன் சேர்ந்து திட்டம் தீட்டி அரங்கேற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே இரும்பு கடை வைத்து நடத்தி வருபவரின் 16 வயது மகளும், அதே பகுதியை சேர்ந்த முத்து காமாட்சி என்ற இளைஞரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதல் விவகாரம் தந்தைக்கு தெரியவர, அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த 16 வயது மகள், காதலனுடன் சேர்ந்து தந்தையை கொலை செய்ய திட்டம் தீட்டினார். இதன்படி, இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தவரை, ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் வழிமறித்த 3 பேர் கொண்ட கும்பல், அவரை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடியது. தகவலின் பேரில் வந்த போலீசார், உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்தவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காதலன் முத்துகாமாட்சியிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, சிறுமியிடம் இருந்து டெலிகிராம் ஆப் மூலம் கால் வந்தது. அதனை ஸ்பீக்கரில் வைத்து கேட்டபோது, தந்தையை கொல்ல மகளே திட்டம் தீட்டியது அம்பலமானது. அதனைத் தொடர்ந்து படுகாயமடைந்தவரின் 16 வயது மகள், காதலன் முத்து காமாட்சி மற்றும் அவரது நண்பர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்