சிறப்பு அனுமதி வழங்க மறுப்பு... முருகன் கோயிலில் தள்ளுமுல்லு - சிறுவாபுரியில் பரபரப்பு

x

திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரி முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சுமார் 2 மணி நேரம் காத்திருப்புக்கு பிறகு பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். முருகனை தரிசனம் செய்ய சிறப்பு அனுமதி வழங்கப்படாததை கண்டித்து உள்ளூர் மக்கள், கோயில் ஊழியர்களை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர். இதனால் சுமார் அரை மணி நேரம் தரிசனம் பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், சமாதான பேச்சுவார்த்தை நடத்தி, உள்ளூர் மக்களை கலைந்து போகச் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்