நொடியில் நடந்த கொடிய மரணம்.. நூலிழையில் உயிர் தப்பிய 2 பேர்.. "நொறுங்கிய கண்ணாடி..சிந்திய ரத்தம்

x

சீர்காழி புறவழிச்சாலையில் காரும் லாரியும் மோதி விபத்துக்குள்ளானதில், காரில் பயணம் செய்த முதியவர் உயிரிழந்துள்ளார். சென்னை அண்ணாநகரை சேர்ந்த சண்முகம், அவரது மனைவி ராஜம், ஓட்டுநர் ராஜ்குமார் ஆகியோர், திருக்கடையூருக்கு சென்று கொண்டிருந்தனர். சீர்காழி அருகே நத்தம் புறவழிச் சாலையில் வளைவில் திரும்பியபோது, கட்டுப்பாட்டை இழந்த கார், எம்சாண்ட் ஏற்றி வந்த லாரி மீது விபத்துக்குள்ளானது. படுகாயமடைந்த 3 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சண்முகம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்