சிவகாசி டூ தாய்லாந்து...ஒரே குடும்பத்தில் தங்கம் வென்ற 3 பேர்...சர்வதேச சிலம்ப போட்டியில் அசத்தல்

x

விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஒன்றியம் ஆனையூர் ஊராட்சிக்கு உட்பட்ட ராமச்சந்திராபுரம் கிராமத்தை சேர்ந்தவர் முனியாண்டி-அன்சி. இவர்களுடைய குழந்தைகளான ஷர்மிளா, கோடீஸ்வரன், ரமோலாபால் ஆகிய மூன்று பேரும் சிறுவயது முதலே சிலம்ப போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை வென்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த 27-ம் தேதி தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற சர்வதேச அளவிலான 2வது உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி சார்பில் பங்கேற்றனர். 300-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்ற இந்த போட்டியில், மூன்று பேருமே ஒற்றைக் கம்பு வீச்சு பிரிவில் முதலிடம் பிடித்து தங்க பதக்கத்தை வென்று அசத்தி உள்ளனர். சர்வதேச போட்டியில் சாதித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதர- சகோதரிகளுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்