களைப்பில் கண் அசந்த எஸ்.ஐ. - கைவரிசை காட்டிய ஆசாமி

x

நெல்லை டவுன் காவல்நிலையத்தில், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ஒருவர், தனது 2 செல்போன்களை மேஜையின் மீது வைத்து பணிகளை மேற்கொண்டு வந்தார். இரவுப் பணி என்பதால், எதிர்பாராத விதமாக சற்று கண் அசந்து தூங்கிய அவர், எழுந்து பார்த்தபோது, மேஜை மீது வைத்திருந்த செல்போன் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பொதுமக்களின் உடைமைகளை பாதுகாக்க வேண்டிய காவலர்களின் அலுவலகத்திலேயே, செல்போன்கள் மாயமானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சிசிடிவி காட்சிகளை வைத்து நடத்தப்பட்ட விசாரணையில், நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியை சேர்ந்த இப்ராகிம் என்பவர் செல்போன்களை திருடியது தெரியவந்தது. காவல்நிலையத்திற்கு அருகில் உள்ள கடையில் பணியாற்றி வந்த இப்ராகிம், கடை உரிமையாளர் 2 மாதங்களாக ஊதியம் கொடுக்காததால், அதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்க வந்ததும், அப்போது எஸ்.ஐ. உறங்கிக் கொண்டிருந்ததைக் கண்டு, செல்போன்களை திருடிச் சென்றதும் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து இப்ராகிமை போலீசார் கைது செய்தனர்.



Next Story

மேலும் செய்திகள்