நாட்டு வெடிகுண்டு தயாரித்த இருவர்... வீசி வெடிக்க செய்த அதிர்ச்சி வீடியோ

x

நாட்டு வெடிகுண்டு தயாரித்த இருவர்... வீசி வெடிக்க செய்த அதிர்ச்சி வீடியோ

நெல்லையில் வெடிகுண்டு தயாரித்து வெடிக்கச் செய்து, அதை சமூக வலைதளத்தில் பதிவிட்டதாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். டவுன் காவல் நிலைய போலீசார், ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அன்னை வேளாங்கண்ணி நகர், அருகே உள்ள வயல் பகுதியில் நின்ற சிலர் போலீசாரைப் பார்த்ததும் தப்பியோடினர். அவர்களை விரட்டியதில் ஒருவர் பிடிபட்டார். அவர் அரசன் நகரைச் சேர்ந்த ரஞ்சித் என தெரி யவந்தது. தப்பியவர்கள் ரஞ்சித்தின் நண்பர்கள் என்றும், அவர்கள் நாட்டு வெடிகுண்டு தயாரித்து வெடிக்கச் செய்து சமூக வலைதளத்தில் பதிவிட் டதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து ரஞ்சித், முகமது தவுபிக் ஆகியோரே கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்