அரசு பள்ளியில் அதிர்ச்சி சம்பவம்... ஓட்டுக் கூரை சுத்தம் செய்யும் பள்ளி மாணவன்.. வைரல் வீடியோ

x

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பள்ளி மாணவனை ஓட்டுக்கூரை மீது ஏற்றி, துப்புரவு பணி செய்ய வைத்த வீடியோ வைரலாகி வருகிறது. ஒழுகினசேரி பகுதியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையம் எதிரில், அரசு ஆரம்பப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்கு, ஓட்டு கட்டிடங்களில் வகுப்பறைகள் செயல்பட்டு வரும் நிலையில், ஓட்டுக் கூரை மீது இருந்த காய்ந்த இலைகளை, பள்ளி மாணவன் ஒருவனை கொண்டு அகற்ற வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்