பெண் போலீசை ஆபாசமாக திட்டி தாக்கிய இளைஞர்கள் - காரைக்காலில் அதிர்ச்சி

x

காரைக்காலில் பணியில் இருந்த பெண் போலீஸ் மீது தாக்குதல் நடத்திய விவகாரத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்...காரைக்காலில் நடைபெற்ற சந்தனக்கூடு நிகழ்வின் ஊர்வலத்தில் பெண் போலீஸ் ஒருவர் பாதுகாப்பு பணியில் இருந்தார். அப்போது, ஊர்வலத்தில் புகைபிடித்துக் கொண்டு பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த இளைஞர்ளை அவர் கண்டித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த இளைஞர்கள், பெண் போலீசை ஆபாசமாக திட்டி தாக்கியுள்ளனர். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், முகம்மது நிஜாமுதின் மற்றும் ரியாஸ் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், தலைமறைவாகவுள்ள மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்