மாணவர்களுக்கு கொடுத்த குளுக்கோஸில் அதிர்ச்சி... சென்னையில் அதிரடி காட்டிய அதிகாரிகள்

x

சென்னை தண்டையார்பேட்டையில், பள்ளி மாணவர்களுக்கு வாங்கப்பட்ட குளுக்கோஸ் காலாவதி ஆனதால், பள்ளி நிர்வாகிகள் கடையை முற்றுகையிட்டனர். நேதாஜி நகரில் உள்ள சீதக்காதி பள்ளியில் குடியரசு தினத்தையொட்டி, மாணவர்களுக்கு குளுக்கோஸ் வழங்கப்பட்டது. அப்போது குளுக்கோஸ் பாக்கெட்டுகள் காலாவதியானது கண்டறியப்பட்டதை தொடர்ந்து, பள்ளி நிர்வாகிகள் கடை உரிமையாளரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கடையில் சோதனையிட்டு காலாவதியான பொருட்களை பறிமுதல் செய்தனர்


Next Story

மேலும் செய்திகள்