குட் டச், Bad டச் பாடத்தால் சிக்கிய "சைக்கோ.." - சிறுமிகள் சொன்னதை கேட்டு அதிர்ந்த பெற்றோர்..!

x

தென்காசி மாவட்டம் புளியங்குடியில், மிட்டாய் வங்கி கொடுத்து நான்கு சிறுமிகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய நபரை போலீசார் போக்சோவின் கீழ் கைது செய்தனர்.

புளியங்குடியை சேர்ந்த காட்டுராஜா என்பவர், தன் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமிகளிடம் இவ்வாறு பாலியல் ரீதியாக அத்துமீறியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், good touch மற்றும் bad touch குறித்து மாணவிகளுக்கு பள்ளியில் பாடமெடுத்த ஆசிரியர்கள், இவ்வாறு தங்களிடம் யாரேனும் தவறாக நடந்து கொண்டால் பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டுமெனவும் கூறியிருக்கின்றனர். இதனடிப்படையில், தங்களுக்கு நேர்ந்ததை பெற்றோரிடம் சிறுமிகள் தெரிவித்ததை அடுத்து, போலீசில் புகாரளிக்கப்பட்டது. இதையடுத்து, டாஸ்மாக்கில் சூப்பர்வைசராக பணியாற்றி வந்த காடுராஜா மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார், அவரை கைது செய்த நிலையில், விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்