செ.பாலாஜி தம்பி வீட்டுக்கு ரெய்டு வந்த அதிகாரிகளை தாக்கிய சம்பவம்.. 4 பேர் சரண்டர்

x

கரூரில் வருமானவரித்துறை அதிகாரிகளை தாக்கிய வழக்கில் நீதிமன்ற உத்தரவின் படி 4 பேர் சரணடைந்தனர்.

கடந்த 10 மாதங்களுக்கு முன்பு கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அதிகாரிகளுக்கும் திமுக தொண்டர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு அதிகாரிகளின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. இதுகுறித்த வழக்கில் 19 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 15 பேர் சிறையில் அடைக்கப்பட்டு ஜாமினில் வெளியில் உள்ளனர். மேலும் 4 பேர் உடல்நிலை சரியில்லாததால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் 4 பேரின் ஜாமினை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. இதையடுத்து காவல்நிலையத்தில் சரணடைந்த 4 பேரையும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்