விமானத்தில் பர்ஸை தொலைத்த செல்வராகவன் - 15 நிமிடத்தில் நடந்த படத்தை விஞ்சிய சம்பவம்

x

விமானத்தில் தொலைத்த பர்ஸை 15 நிமிடங்களில் மீட்டுக் கொடுத்த ஏர் இந்தியா நிறுவனத்திற்கு இயக்குநர் செல்வராகவன் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவரது ட்விட்டர் பதிவில், மதுரையில் இருந்து சென்னை செல்லும்போது ஏர் இந்தியா விமானத்தில் தனது பர்ஸை தவறவிட்டதாகவும், 15 நிமிடங்களில் தன்னை தொடர்பு கொண்ட ஏர் இந்தியா நிர்வாகம் தொலைத்த பர்ஸை திருப்பிக் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், இந்த நடவடிக்கையால் ஈர்க்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ள அவர், ஏர் இந்தியா நிர்வாகத்திற்கு மிக்க நன்றி என பதிவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்