அழுகிய நிலையில் கிடந்த இளைஞரின் உடல் - பின்னணியில் நண்பன் நிகழ்த்திய பயங்கரம்

x

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அவரது சிறை நண்பரை போலீசார் கைது செய்தனர். மானுவக்காடு என்னும் இடத்தில், கடந்த 25ம் தேதி அழுகிய நிலையில் இளைஞரின் உடலை போலீசார் மீட்டனர். கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், உயிரிழந்த நபர் குமாரபாளையத்தை சேர்ந்த கார்த்தி என தெரிய வந்தது. மேலும், இதுதொடர்பாக ஈரோட்டை சேர்ந்த கவுரிசங்கர் என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில், சிறையில் இருந்தபோது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாகவும், கார்த்தியிடம் பணப்புழக்கம் அதிகமாக இருந்ததால், பணத்திற்காக இந்த கொலை சம்பவத்தை கவுரி சங்கர் அரங்கேற்றியதும் தெரியவந்தது.


Next Story

மேலும் செய்திகள்