"இரு குழந்தைகளுக்கும் என் வயது இருக்கும்"...இரண்டாம் திருமணம் செய்த பெண் குமுறல் - சாலை மறியலால் பரபரப்பு

x

சேலம், திருவாகக் கவுண்டனூர் பகுதியை சேர்ந்த இந்த 26 வயது இளம் பெண்ணுக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இதில் இரு குழந்தைகள் பிறந்த நிலையில், கணவர் கடந்த கொரோனாவால் நோய் தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்திருக்கிறார். இந்நிலையில், தன்னிடம் அறிமுகமான சேலத்தை சேர்ந்த வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவரை இப்பெண் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட நிலையில், அந்த வெளிநாடு வாழ் இந்தியருக்கு ஏற்கனவே திருமணமாகி, மனைவி கேன்சரால் உயிரிழந்ததாகவும், இதில் அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதையறிந்தே அந்நபரை இப்பெண் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில், இந்த திருமணத்தை... தனக்கு 40 வயதுதான் ஆகிறது என்றும், தனது இரு குழந்தைகளும் பள்ளியில் படிக்கும் சிறுமிகள் எனவும் கூறி அவர் நடத்தியதில் தான் சிக்கல் என இப்பெண், சேலம் முள்ளுவாடி கேட் பகுதியில் நடத்திய போராட்டம் பெரும் களேபரத்தை உண்டாக்கியது.


Next Story

மேலும் செய்திகள்