பள்ளி தலைமை ஆசிரியரின் கொடூர செயல் - சேலத்தில் அதிர்ச்சி

x

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே, மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். காடையாம்பட்டி தாலுக்காவில் இயங்கிவரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், 88 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். அதே பகுதியை சேர்ந்த சின்னராசு என்பவர், அந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் பள்ளியில் படிக்கும் மாணவிகளிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், தலைமை ஆசிரியர் சின்னராசு தலைமறைவானார்.


Next Story

மேலும் செய்திகள்