"2 பாடத்தில் மார்க் கம்மி.." பெரும் பயத்தில் சிறுவன் எடுத்த முடிவு - பெற்றோருக்கு பேரதிர்ச்சி

x

ராணிப்பேட்டையில் காணாமல் போன 16 வயது சிறுவன், காவல் கரங்கள் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டான். சென்னை கோயம்பேடு பகுதியில் சிறுவன் சுற்றித்திரிவதாக பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். இதன்பேரில், காவல் கரங்கள், தன்னார்வலர்கள் உதவியுடன் சிறுவனை மீட்டு, வில்லிவாக்கம் சிறுவர் காப்பகத்தில் சேர்த்தனர். மீட்கப்பட்ட சிறுவன், ஆற்காட்டில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்ததும், 2 பாடங்களில் குறைந்த மதிப்பெண் பெற்றதால், பள்ளிக்குச் செல்வதாக கூறிவிட்டு, வீட்டைவிட்டு வெளியேறி சென்னை வந்ததும் தெரியவந்தது. காவல் கரங்கள் மூலம் மீட்கப்பட்ட சிறுவன், அவனது தந்தை அர்ச்சுனனிடம் ஒப்படைக்கப்பட்டான்.


Next Story

மேலும் செய்திகள்