சிறைக் கைதிகளுக்கு தாம்பத்திய உரிமை வழங்கும் திட்டம் - நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம்

x

திருவள்ளூர் மாவட்டத்திற்கு பொறுப்பு நீதிபதியாக உள்ள உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம், புழல் சிறையில் திடீர் சோதனை நடத்தினார். தொடர்ந்து, அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டத்தையும் நடத்தினார். பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் உள்ளது போல, சிறைக் கைதிகளுக்கு தாம்பத்திய உரிமை வழங்கும் திட்டத்தை தமிழகத்திலும் செயலபடுத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டுமென கூட்டத்தின் மூலம் தமிழக அரசுக்கு கேட்டுக் கொள்ளப்பட்டது. மேலும், புழல் சிறையில் உள்ள கைதிகளுக்கும், சிறைக்கு வரும் பார்வையாளர்களுக்கும் அறை வசதி, மின் விசிறி, தரமான உணவு உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென முடிவெடுக்கப்பட்டுள்ளது. 6 வயது வரையிலான குழந்தைகள் சிறையில் தாயுடன் இருக்க அனுமதிக்கப்பட்டுள்ளதால், மழ‌லையர் பள்ளிகளை தொடங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்