"ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட சாந்தனுக்கு.." - இலங்கை அமைச்சர் சொன்ன தகவல்

x

முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் விடுவிக்கப்பட்டுள்ள சாந்தன் நாடு திரும்புவதற்கு எந்தவித தடையும் இல்லை என, இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இருநாடுகளிலும் இருந்து சாந்தன் இலங்கை திரும்புவதற்கான கோரிக்கைகள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டதாகவும், அவர் நாடு திரும்புவதில் எந்தவித தடையும் இல்லை என்றும் குறிப்பிட்டார். இலங்கை அரசு எவ்வித ஆட்சேபனையையும் தெரிவிக்கப் போவதில்லை என்றும், எந்த சந்தர்ப்பத்திலும் சாந்தன் நாடு திரும்ப முடியும் என்றும் அலி சப்ரி குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்