மூதாட்டிக்கு ஏற்பட்ட கொடுமை.. கேட்பதற்கே நொறுங்கும் நெஞ்சம்

x

சங்கரன்கோவில் அருகே உள்ள லட்சுமியாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் 80 வயது மூதாட்டியான சின்ன கிருஷ்ணம்மாள். மூதாட்டிக்கு கை ரேகை பதிவாகாததால் கடந்த மூன்று மாதங்களாக ரேசன் அரிசி வழங்கவில்லை என்றும், முதியோர் உதவி தொகையும் கிடைக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார். வயதானவள் என்பதால் தன்னை பேருந்தில் ஏற்ற மறுப்பதாகவும், ரேகை பதிவு செய்ய கடந்த மூன்று மாதங்களாக அலைக்கழிக்க படுவதாகவும் வேதனை தெரிவித்தார். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மூதாட்டி வேண்டுகோள் விடுத்தார்.


Next Story

மேலும் செய்திகள்