"மணல் கடத்தல்" - அண்ணாமலை பரபரப்பு ட்வீட்

x

தமிழ்நாட்டில் மணல் கடத்தலை தடுக்கும் அதிகாரிகளை கொலை செய்வதும், அவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்துவதும் தொடர்ந்து வருவதாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அண்ணாமலை, பழனி அருகே மணல் கடத்தலை தடுக்கச் சென்ற கிராம நிர்வாக அலுவலரை, லாரி ஏற்றி கொல்ல முயற்சித்த செய்தி அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். கிராம நிர்வாக அலுவலர்கள், தற்பாதுகாப்புக்காக துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி கேட்கும் அளவுக்கு, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருப்பதாகவும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்