சாமி தோப்பு தலைமை பதி நிர்வாகிக்கு உயிர் பய மிரட்டல்

x

நாகர்கோவில் வழக்கறிஞர்கள் சங்க தலைவரான பால ஜனாதிபதி திமுகவில் அரசியல் பணி செய்து வருகிறார். சமூக வலைதளங்கள் மற்றும் திமுக மேடைகளில் பாஜக மற்றும் பிரதமர் மோடி, தமிழக ஆளுநர் குறித்து அவர்களுக்கு எதிரான கருத்துக்களைத் தெரிவித்து வருவதாகக் கூறப்படுகிறது... இந்நிலையில் சுவாமிதோப்பில் உள்ள அவரது இல்லத்திற்கு தபால் ஒன்று வந்தது. அதில் வரும் காலங்களில் பிரதமர் மோடி, ஆளுநர் ரவி, மற்றும் பாஜகவுக்கு எதிராக பேசினால் கொலை செய்து விடுவோம் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தென் தாமரை குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து தென் தாமரைக் குளம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்