சென்னை லோக்கல் ட்ரெயினில் பயணியை கத்தியால் குத்திய சமோசா வியாபாரி

x

சென்னையில், ரயிலில் பயணியை கத்தியால் தாக்கிய சமோசா வியாபாரி கைது செய்யப்பட்டார். திருநின்றவூர் மணி மண்டபம் தெருவை சேர்ந்த 20 வயதான ஆகாஷ் என்பவர், சென்ட்ரலில் இருந்து திருநின்றவூர் மின்சார ரயில் மூலம் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போதும் அதே ரயிலில் பெரம்பூர் ரயில் நிலையத்தில் சமோசா வியாபாரி ஒருவர் ஏறி வியாபாரம் செய்து கொண்டு இருந்தார். அப்போது ஆகாசுக்கும் சமோசா வியாபாரிக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில், கத்தியால் குத்தி விட்டு, தப்பி ஓடிவிட்டார். இது குறித்த விசாரணையில் கத்திக்குத்தில் ஈடுபட்ட

ஆவடி அடுத்த ஆரிக்கம்பேட்டைச் சேர்ந்த சமோசா வியாபாரி கண்ணதாசன் என்பவரை போலீசார் கைது செய்தனர்


Next Story

மேலும் செய்திகள்