சாமியாரே, 100 கோடி தர்றோம்... முடிந்தால் தொட்டுப் பார்.. தி.மு.க.வினர் பகிரங்க சவால் | Udhayanidhi Stalin

x

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சில கருத்துகளை தெரிவித்திருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அயோத்தி சாமியார் பரமஹம்ச ஆச்சார்யா, உதயநிதி தலையை கொண்டு வருபவர்களுக்கு முதலில் 10 கோடி ரூபாய் பரிசு அறிவித்து, பின்னர் அது போதாவிட்டால் கூடுதலாக தருவதாகவும் கூறி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார். இதற்கு பதிலடி தரும் வகையில் கோவையில் மாநகர் மாவட்ட தி.மு.க.வினர் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். அதில் போலிச் சாமியாரே, நாங்கள் 100 கோடி ரூபாய் தருகிறோம், தொட்டுப் பாருங்கள் என்ற வாசகங்களுடன் சவால் விடுத்துள்ளனர். டவுன்ஹால், லங்கா கார்னர், ரயில் நிலையம் அருகில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இதற்கு பா.ஜ.க.வினர், சனாதனம் எங்கள் உயிர் மூச்சு என்ற வாசகங்களுடன் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்