பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு... போக்சோவில் கைதான ஆசிரியர்

x

சேலம் அருகே, பள்ளி மாணவிகளை பாலியல் தொந்தரவு செய்ததாக ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். கொங்கணாபுரம் ஒன்றியம் அரிசிபாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில் பணிபுரிந்து வரும் ஆசிரியர் பழனியப்பன் என்பவர், அதே பள்ளியில் பயிலும் ஐந்தாம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. இது சம்மந்தமாக பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், பழனியப்பனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்