சாலையில் ஆஃப்பாயில் போட்ட நபர் - கைது செய்த காவல்துறை

x

சேலத்தில் வெயிலின் தாக்கத்தை அறிவுறுத்த சாலையில் ஆஃப்பாயில் போட்ட நபரை, போலீசார் கைது செய்து எச்சரித்தனர். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள சாலையில், பிரபாகரன் என்பவர் தனது நண்பருடன் சேர்ந்து முட்டையை உடைத்து ஆஃப்பாயில் போட்டார். வெயில் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த அவர் இந்த முயற்சியை மேற்கொண்டதாக கூறப்படும் நிலையில், இச்செயல் பொதுமக்களுக்கு தொல்லை தரும் வகையில் இருப்பதாகக் கூறி அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர், இது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என எச்சரித்து அவரை திருப்பி அனுப்பினர்


Next Story

மேலும் செய்திகள்