சேலம் சிறையில் ஒலிப்பெருக்கி மூலம் தினம் ஒரு திருக்குறள் - அசத்தும் காவலர்கள்

x

தினசரி ஒலிபெருக்கி மூலமாக காவலர் ஒருவர் திருக்குறளை கூறி, அதற்கான பொருள் விளக்கத்தையும் சொல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை அனைத்து சிறை தொகுதிகளிலும் உள்ள சிறைவாசிகள் கேட்கும் வரை ஒலி பெருக்கிகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் என்னென்ன தினங்கள் கொண்டாடப்பட்டு வருகிறதோ? அந்த தினம் மற்றும் அதன் வரலாறுகள் கூறும் நிகழ்வை கோவை சரக டிஐஜி சண்முகசுந்தரம் உத்தரவின் பேரில் சேலம் மத்திய சிறை கூடுதல் கண்காணிப்பாளர் வினோத் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளார். இது கைதிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்