ஊரையே மிரட்டி வரும் கந்து வட்டி கும்பல் - கலெக்டர் அலுவலகம் முன் பொதுமக்கள் தர்ணா போராட்டம்

x

ஊரையே மிரட்டி வரும் கந்து வட்டி கும்பல் மீது நடவடிக்கை எடுக்க கோரி, பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாவட்டம் டி பெருமாபாளையத்தில் திருநாவுக்கரசு என்பவரும், அவரது குடும்பத்தினரும் கந்து வட்டிக்கு பணம் கொடுத்து, அதன்மூலம் மக்களை மிரட்டி அராஜகத்தில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த ரவீந்திரன் தட்டிக் கேட்டதாகவும், அப்போது திருநாவுக்கரசும், அவரது சகோதரர் கிருபாகரனும் சேர்ந்து ரவீந்திரனை தாக்கியதாகவும், இதில் ரவீந்திரன் படுகாயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து டி பெருமாபாளையத்தை சேர்ந்த பொதுமக்கள், கந்து வட்டிக்கு பணம் கொடுத்து, அராஜகம் செய்து வரும் திருநாவுக்கரசு மற்றும் அவர்களது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரி, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்னர் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்