பேரறிஞர் அண்ணாவின் உருவப்படத்திற்கு சைதை துரைசாமி மாலை அணிவித்து மரியாதை

x

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி, அவரது உருவப்படத்திற்கு, சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி மரியாதை செலுத்தினார். அண்ணாவின் 115வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் அண்ணாவின் சிலை மற்றும் அவரது உருவப்படத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், சென்னை முன்னாள் மேயரும், மனிதநேய அறக்கட்டளையின் தலைவருமான சைதை துரைசாமி, தனது இல்லத்தில் அண்ணாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்