வங்கி செய்த அடுத்த சம்பவம்...Account-க்கு வந்த ரூ.753 கோடி..அதிர்ந்து போன வாடிக்கையாளர் | Chennai

x

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த முகமது இத்ரீஸ் என்பவர், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மருந்தகத்தில், மாதம் 15 ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், முகமது இத்ரீஸ் வைத்துள்ள வங்கிக்கணக்கிற்கு

753 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக, அவரது செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், சம்பந்தப்பட்ட வங்கியை தொடர்பு கொண்டபோது, விவரங்களை பெற்றுக்கொண்டு முறையாக பதிலளிக்கவில்லை என கூறப்படுகிறது. பின்னர் முகமதின் வங்கி கணக்கை சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகள் முடக்கியுள்ளனர். வெறும் 3 ஆயிரம் ரூபாய் மட்டுமே வங்கிக் கணக்கில் வைத்திருந்த நிலையில், 753 கோடி ரூபாய் பணம் எப்படி வந்தது என தெரியாமல் முகமது அதிர்ச்சியில் உறைந்தார்.


Next Story

மேலும் செய்திகள்