Ex. ராணுவ வீரர் வீட்டில் கொள்ளை.. வசமாக சிக்கிய 3 பேர் திருவாரூர் போலீசார் அதிரடி

x

திருவாரூர் அருகே, ஓய்வுபெற்ற ராணுவ வீரர் வீட்டின் பூட்டை உடைத்து, 22 சவரன் நகைகளை கொள்ளையடித்த வழக்கில், 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நவநீதிகிருஷ்ணன். ஓய்வுபெற்ற ராணுவ வீரரான இவரது வீட்டில், கடந்த மாதம் 22 சவரன் நகை, ஒரு கிலோ வெள்ளி, 10 ஆயிரம் ரூபாய் ரொக்கம் கொள்ளைபோனது. இது தொடர்பாக விசாரித்து வந்த தனிப்படை போலீசார், கார்த்திக், சேகர், பாண்டியன் ஆகியோரை கைது செய்து, திருடியப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்