மேம்பால பணிக்காக மூடப்பட உள்ள சாலை... கோரிக்கையை ஏற்று அமைக்கப்பட்ட மாற்றுப்பாதை

x

திருவண்ணாமலை மாவட்டம் போளூரில், ரயில்வே மேம்பால பணிகளுக்காக, ரயில்வே கேட் பிரதான சாலை முழுவதுமாக மூடப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது. மாற்றுப்பாதையாக நகரை சுற்றி உள்ள பைபாஸ் சாலையை பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டது. இதனால் 6 கிலோமீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டி இருப்பதாகவும், அருகிலேயே மாற்றுப்பாதை அமைக்குமாறும், அப்பகுதி மக்கள் தந்தி டிவி வாயிலாக கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் ரயில்வே கேட் அருகிலேயே மாற்றுப்பாதை அமைக்கப்படுவதால், மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்