"8 இன்ச்க்கு ரோடு.." - பள்ளமான வீடுகள் - குமுறும் மக்கள்

x

நெல்லை மாநகராட்சியில், விதிமுறைகளைப் பின்பற்றாமல் சாலை அமைக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். நெல்லை மாநகராட்சி சிந்துபூந்துறையில், ஏற்கனவே சாலையில் போடப்பட்ட கான்கிரீட்டை பெயர்த்தெடுக்காமல், அதன்மேல் பேவர் பிளாக் சாலை போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வீடுகளைவிட சாலையின் உயரம் அதிகமாக உள்ளதாகவும், மழைக்காலங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து பாதிப்பு ஏற்படும் எனவும் புகார் தெரிவித்துள்ளனர். எனவே, பழைய கான்கிரீட் சாலையை பெயர்த்து எடுத்து, புதிய சாலை அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்