என்ன கொடுமை சரவணன் இது..!சாலை நடுவே முளைத்த அடிகுழாய் ..குமுறும் பொதுமக்கள்

x

தென்கரை வாய்க்கால் பகுதியில் அடிகுழாயை அகற்றாமல், அது இருந்தவாறே சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அடிகுழாயையும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அரசு நிதி வீணாகி விட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஒப்பந்ததாரர்கள் சிலர் செய்யும் தவறுகளால் அரசுக்கும் அதிகாரிகளுக்கும் கெட்ட பெயர் என அவர்கள் வருத்தம் தெரிவித்தனர். மேலும் அதிகாரிகள் இதை உடனடியாக கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்