தோண்ட தோண்ட கையில் வந்த தார் சாலை - தீயாய் பரவும் காட்சிகள்

x

கரூரில் தரமற்ற முறையில் அமைக்கப்பட்ட தார்ச்சாலை, கைகளில் அடைபோல் சுருண்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கடவூர் அருகே 4 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஒரு கோடியே 12 லட்சம் ரூபாய் செலவில் புதிய தார்ச்சாலை போடப்பட்டுள்ளது. ஏற்கெனவே இருந்த தார்ச்சாலையை அகற்றாமல் அதன்மீதே புதிய சாலையும் போடப்பட்டுள்ள நிலையில், கைகளால் தட்டினாலேயே, தார்ச்சாலை அடைபோல சுருண்டு வருகிறது. இதுதொடர்பான வீடியோ சமூக ஊடகத்தில் பரவி வரும் நிலையில், சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்