"விரைவில் தீர்வு காண வேண்டும்" - பி.டி.ஆர்.

x

அறங்காவலர் குழு நியமனத்திற்கு பின்னர், மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகத்திற்கான திருப்பணி விரைவில் தொடங்கப்படும் என அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். மதுரையில் பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் நவீன இயந்திரத்தின் செயல்பாடுகளை பார்வையிட்டபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மனிதர்களே மனித கழிவை எடுக்கக் கூடாது என்பது தமிழக அரசின் கொள்கை முடிவு என்று தெரிவித்தார். புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, பாதாள சாக்கடை பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்