செம்மண் கடத்துவதாக புகார்.. ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்ற உத்தரவு

x

திண்டுக்கல் அருகே நடைபெறும் செம்மண் கடத்தலை தடுக்ககோரிய வழக்கில், மாவட்ட ஆட்சியர் பதிலளிக்கும்படி, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ஆயக்குடி பேரூராட்சி பகுதிகளிலிருந்து, செங்கல் சூளைகளுக்கு சட்டவிரோதமாக செம்மண் கடத்தப்படுவதாகவும், அதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரியும், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்த வழக்கில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரும், புவியியல் மற்றும் சுரங்க உதவி இயக்குனரும் பதிலளிக்க உத்தவிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்