ரியல் எஸ்டேட் அதிபரை குலைநடுங்கவிட்ட பிரபல கட்சி நிர்வாகிகள்.. பகீர் காட்சி

x

முசிறி ரியல் எஸ்டேட் பிரமுகருக்கு கொலை மிரட்டல் விடுத்த, தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். திருச்சி மாவட்டம் மாவட்டம் முசிறியை சேர்ந்தவர் ரியல் எஸ்டேட் பிரமுகர் ஞானசேகர். இவரது வீட்டிற்கு சென்ற இருவர், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீசார், கொலை மிரட்டல் விடுத்த தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் சண்முகத்தையும், ஒன்றிய பொறுப்பாளர் செந்திலையும் கைது செய்துள்ளனர். ஞானசேகரை மிரட்டி பணம் பறிப்பதற்காக, இருவரும் அவரது வீட்டிற்கு சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்