ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த Rapido - 'ஜெயிலர்' மூலம் சண்டையை சமாதானமாக்கும் முயற்சியா?

x

Rapido Vs ஓட்டுநர்கள்..ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த Rapido - 'ஜெயிலர்' மூலம் சண்டையை சமாதானமாக்கும் முயற்சியா?

ரேபிடோ நிறுவனம் சார்பில் 500 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஜெயிலர் திரைப்படம் திரையிடல் நிகழ்ச்சி சென்னை தி.நகரில் உள்ள திரையரங்கில் நடைபெற்றது...பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் பைக் - ஆட்டோ டாக்சி நிறுவனமான ரேபிடோ, தங்களுடன் இணைந்து பணியாற்றி அதிக வருமானம் ஈட்டும் ஆட்டோ ஓட்டுநர்கள் 500 பேரை தேர்வு செய்து ஜெயிலர் திரைப்படம் திரையிடம் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. குளிர்பானம், பாப்கார்ன் வழங்கப்பட்ட நிலையில், ஆட்டோ ஓட்டுநர்கள் உற்சாகமாக படத்தைக் கண்டு களித்தனர். பைக் டாக்சி சேவையயை ஆட்டோ ஓட்டுனர்கள் எதிர்த்து வரும் நிலையில் ரேபிடோ நிறுவனம் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்