காவல் நிலையம் சென்ற ரஞ்சனா நாச்சியார் - நீதிமன்றத்தில் இருந்து வராத உத்தரவு

x

குன்றத்தூர் அருகே அரசுப்பேருந்தின் படிக்கட்டில் பயணித்த மாணவர்களை, நடிகையும் பாஜக பிரமுகருமான ரஞ்சனா அடித்து பேருந்தில் இருந்து இறக்கிவிட்டார். மேலும் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநரை அவதூறாக திட்டினார். இந்த வழக்கில் ரஞ்சனா நாச்சியாரை நிபந்தனை ஜாமினில் விடுவித்த நீதிமன்றம், தினமும் மாங்காடு காவல்நிலையத்தில் காலையும், மாலையும் கையெழுத்திட உத்தரவிட்டது. அதன்படி, இன்று கையெழுத்திடவந்த அவர், இன்னும் நீதிமன்ற ஆணையின் நகல் காவல்நிலையத்திற்கு வராததால், திரும்ப சென்றார்.


Next Story

மேலும் செய்திகள்