தந்தைக்கு ஆசையாக வாங்கி வந்த Fried Rice-ஐ சாப்பிட்ட நாய்.. - பரிதாபமாக பலியான உயிர்

x

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த குப்பிடிசாத்தம் கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி. 72 வயது முதியவரான இவருக்கு... சம்பவத்தன்று அவருடைய மகன் சண்முகம் ஆசையாக இரண்டு ஃப்ரைட் ரைஸ் வாங்கி வந்திருக்கிறார். இரண்டு பார்சல்களையும் சண்முகம் வீட்டிற்குள் வைத்திருந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த சிவா என்பவரின் நாய் வீட்டிற்குள் புகுந்து ஃப்ரைட் ரைஸ் -ஐ சாப்பிட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த சண்முகம் நாயை அடித்து துரத்தியதாக கூறப்படுகிறது. இதனால், சிவாவிற்கும் சண்முகத்திற்குமிடையே வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பான நிலையில், தடுக்க வந்த சண்முகத்தின் தந்தை முனுசாமியை சிவா கீழே தள்ளி தாக்கியதாக தெரிகிறது. இதில், படுகாயமடைந்த முதியவர், மருத்துவமனை செல்லும் வழியிலே உயிரிழந்த நிலையில், புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தி வந்த போலீசார், இளைஞர் சிவாவை கைது செய்து சிறையிலடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்