கையை வைத்தாலே புண்ணாக்கு போல் பெயர்ந்து வரும் புதிய சாலை

x

பாம்பன் பாலம் அருகே தரமற்ற முறையில் தார்சாலை அமைக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். ராமேஸ்வரம் அருகே பாம்பன் சாலை பாலத்தின் இறக்கத்திலிருந்து ரயில்வே ஸ்டேஷன் வரை குண்டும், குழியுமாக கிடந்த தார்சாலை நேற்று இரவு புதிதாக போடப்பட்டது. அந்த சாலையானது தரமற்ற பொருட்களைக் கொண்டு அமைக்கப்பட்டதாக மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். தங்களுடைய கை மற்றும் கால்களினால் சுரண்டினாலே அலேக்காக பெயர்ந்து வருவதால் அரசு பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்துள்ளனர். அவற்றை முழுமையாக அப்புறப்படுத்தி விட்டு மீண்டும் புதிய தார் சாலை அமைக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்