ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க கோரி மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால்...
ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்..!
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க கோரி மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் ராமேஸ்வரம் துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது. கடந்த புதனன்று ராமேஸ்வரத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற 1 படகு மற்றும் 6 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாகக் கூறி சிறையில் அடைத்தனர். இதையடுத்து சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்கக் கோரி மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் துறைமுகம் வெறிச்சோடியுள்ள நிலையில், நாள் ஒன்றுக்கு சுமார் சுமார் 5 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story