பெயரை மாற்ற ரூ. 10,000.. பணத்தை வாங்கியதும் `லாக்' செய்த அதிகாரிகள்

x

ராமநாதபுரத்தில் வீட்டுமனையை பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய, வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். பிரவீன் குமார் என்பவர் தந்தையின் பெயரில் இருந்த வீட்டு வசதி வாரிய வீட்டுமனையை, தாயின் பெயருக்கு மாற்ற முயற்சித்துள்ளார். இதற்காக அவர், ராமநாதபுரத்திலுள்ள வீட்டு வசதி வாரிய அலுவலகத்தை அனுகிய நிலையில், 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்கப்பட்டுள்ளது. அதன்படி, பிரவீன் குமார் லஞ்சப் பணத்தை அளித்த போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர், பணத்தை பெற்ற ஒப்பந்த ஊழியர் பாலாமணியை கைது செய்தனர். தொடர்ந்து இந்த விவகாரத்தில் தொடர்புடைய வீட்டு வசதி வாரிய நிர்வாக பொறியாளர் ரவிச்சந்திரன், எழுத்தர் பாண்டியராஜ் ஆகியோரும் கைதாகினர்.


Next Story

மேலும் செய்திகள்