மலைப்பாம்புடன் ஆக்ரோஷமாக சண்டையிட்ட ராஜநாகம் - அலறிய மக்கள்.. பரபரப்பு காட்சிகள்

x

கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே 8 அடி நீளமுள்ள மலைப் பாம்பை 15 அடி நீளமுள்ள ராஜநாகம் விழுங்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தட்சிண கன்னடாவின் இந்தப்பெட்டு கிராமத்தில் உள்ள தோட்டத்தில் மலைப் பாம்பை ராஜநாகம் விழுங்கிக்கொண்டிருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், பாம்பு பிடி நிபுணருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக அங்கு வந்த பாம்பு பிடி நிபுணர் அசோக், சுமார் அரை மணி நேரம் போராடி இரண்டு பாம்புகளையும் மீட்டு வனப்பகுதிக்குள் விடுவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்