ஸ்ரீபெரும்புதூர் செல்லும் ராகுல் காந்தி - உச்சக்கட்ட உஷார் நிலையில் சென்னை..!

x

ஸ்ரீபெரும்புதூர் செல்லும் ராகுல் காந்தி - உச்சக்கட்ட உஷார் நிலையில் சென்னை..!

காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து பாத யாத்திரையை 7 -ந் தேதி தொடங்குகிறார். இதற்காக இன்று மாலை டெல்லியில் இருந்து புறப்பட்டு, இரவு 8 மணி

அளவில் சென்னை விமான நிலையம் வந்து சேருகிறார். விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சி சாா்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. இரவு சென்னையில் தங்கும் ராகுல் காந்தி நாளை புதன்

கிழமை காலையில், சென்னையில் இருந்து காரில் ஸ்ரீபெரும்புதூர் சென்று ராஜீவ்காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார். பின்னர், அங்கிருந்து ராகுல்காந்தி சென்னைக்கு காரில் திரும்பி

வருகிறார். இதையடுத்து, காலை 11:40 மணிக்கு சென்னையில் இருந்து விமானத்தில் திருவனந்தபுரம் புறப்பட்டு செல்கிறார்.

ராகுல்காந்தி வருகையை ஒட்டி அவருக்கு அளிக்க வேண்டிய பாதுகாப்பு பற்றிய சிறப்பு ஆலோசனை கூட்டம் சென்னை விமான நிலையத்தில் நடந்தது.

ராகுல்காந்தி வருகையையொட்டி சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த முடிவு செய்யப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்