திடீரென போராட்டத்தில் குதித்த கைதிகள்.. புழல் சிறையில் பரபரப்பு

x

புழல் சிறையில் ரம்ஜான் நோன்பிருந்த கைதிகளுக்கு முறையாக உணவு வழங்கவில்லை எனக் கூறி, சிறை காவலர்களை கண்டித்து கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை புழல் சிறையில் விசாரணை, தண்டனை, மகளிர் என 3 பிரிவுகளில், சுமார் 3000க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். விசாரணை கைதிகள் பிரிவில் நோன்பிருந்த இருந்த இஸ்லாமியர்களுக்கு சிறை காவலர்கள் உணவை தாமதமாக கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் சிறை காவலர்களை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.இது குறித்து தகவலறிந்து சிறை அதிகாரிகள் கைதிகளை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்..


Next Story

மேலும் செய்திகள்