புழல் சிறைக்குள் செல்போன்கள் - ரெய்டு விட்ட போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த கைதிகள்

x

புழல் சிறையில் கைதிகளால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் புழல் மத்திய சிறையில், காவலர்கள் திடீர் சோதனையை நடத்தினர். அப்போது, சிறைக்குள் 2 செல்போன்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை மீட்கும் போது, ஐந்து கைதிகள் காவலர்களிடம் தகராறில் ஈடுபட்டு, கொலை மிரட்டலும் விடுத்தனர். அவர்கள், ஐந்து பேர் மீதும் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்