சாலை மறியலில் குதித்த அரசு ஊழியர்கள்.. புதுக்கோட்டையில் பரபரப்பு

x

புதுக்கோட்டையில் தபால் ஓட்டு போடவந்த அரசு ஊழியர்கள், திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் அரசு ஊழியர்கள் தபால் ஓட்டு போடுவதற்கு, ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் ஓட்டுப்போட வந்த அரசு ஊழியர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அரசு ஊழியர்களுக்கு, ஓட்டு போடுவதற்கான முறையான அழைப்பு வரவில்லை என்றும் கல்லூரியில் முறையான கழிப்பறை வசதி இல்லை என்றும் குற்றம்சாட்டி, இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்